24 660b731f1cf1c
இலங்கைசெய்திகள்

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார்

Share

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார்

30 லட்சம் ரூபா மோசடி தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் லென்லி ஜோன்சன் ஆகியோரை கைது செய்ய முடியாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திணறுவதாக தெரியவந்துள்ளது.

6 நாட்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொரலஸ்கமுவவில் உள்ள தமிதா அபேரத்னவின் வீட்டிற்கு சென்றிருந்த போதிலும், இருவரும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமித அபேரத்ன தம்பதியினரின் நிலுவையில் இருந்த பிணை விண்ணப்பத்தை கடந்த 27ஆம் திகதி நீதவான் திலின கமகே நிராகரித்தார்.

அதற்கமைய சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு பொரலஸ்கமுவ பபிலியான இல்லத்திற்குச் சென்றது. ஆனால் இருவரும் வீட்டில் இல்லை. தமிதா அபேரத்னவின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தார்.

எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அன்றைய தினம் இரவு முதல் மறுநாள் பிற்பகல் வரை அவரது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த போதும் ஏமாற்றத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு திரும்பியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...