accident
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொள்ளுப்பிட்டி விபத்து! – சாரதிக்கு மறியல்

Share

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் டுபாய் நோக்கி தப்பிச் சென்றிருந்த நிலையில், நேற்று (12) இரவு அந்நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கார் ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதி இடம்பெற்ற விபத்தின் பிரதான சந்தேகநபராவார்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்திருந்தார்.

விபத்தின் போது, ​​அந்த காரின் பின்னால் பயணித்த பெண் ஒருவரை மூன்று பெண்கள் கொடூரமாக தாக்கியிருந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட கொள்ளுப்பிட்டி பொலிஸார் இரண்டு பெண்களை கைது செய்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...