அவசரத்தால் நேர்ந்த விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சாரதி (படங்கள்)

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி கீழே பாய்ந்து உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவமானது இன்று (12) முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Accident 3

கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன் தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டி சேதமடைந்ததுடன், சாரதி கீழே பாய்ந்து உயிர்தப்பியுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version