corona death 3
செய்திகள்இலங்கை

வவுனியாவில் 94 பேருக்கு தொற்று! – இருவர் மரணம்

Share

வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புவைத்திருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் , அன்டிஜென் பரிசோதனை முடிவுகளின் ஒரு பகுதி இன்று (23) வெளியிடப்பட்டிருந்தது.

இந்த முடிவுகளின்படி மேலும் 94 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

இதேவேளை, வவுனியாவில் நேற்று இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சாந்தசோலை பகுதியிலுள்ள பெண் ஒருவரும் (வயது – 58), தவசிகுளம் பகுதியிலலுள்ள பெண் ஒருவருமே (வயது – 35) இவ்வாறு கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...