7 40
இலங்கைசெய்திகள்

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 77 அரசாங்க ஊழியர்கள் கைது

Share

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 77 அரசாங்க ஊழியர்கள் கைது

கடந்த 2024ஆம் ஆண்டில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 77 அரசாங்க ஊழியர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட அரச ஊழியர்களில் ஆகக்கூடுதலானவர்கள் பொலிஸார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 22 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.​

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஊழியர்கள் ஆறு பேரும் இந்தக் காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதற்கு அடுத்ததாக நீதிமன்ற ஊழியர்கள் ஐந்து பேர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீ்ழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே ​போன்று கிராம அலுவலர்கள் மூன்று பேர், பாடசாலை அதிபர்கள் மூன்று பேர் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் மொத்தமாக 77 அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...