delda
இலங்கைசெய்திகள்

வடக்கிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது டெல்டா – வவுனியாவில் 50 பேருக்கு தொற்று!

Share

நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் தொற்று தற்போது வவுனியா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் வரும்நிலையில், அண்மையில் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைப்படி 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 50 பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த முடிவுகளின்படி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் செட்டிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேரும் ஏனைய பிரிவுகளில் தலா 5 பேருமாக 50 பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...