mahinda namal
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவிடம் 5 மணி நேரம் விசாரணை!

Share

மே – 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 5 மணிநேரம் இரகசியமாக வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த இடத்துக்கு நேற்று முன்தினம் (25) நேரில் சென்றே குற்றப் புலனாய்வு பிரிவினர், இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாதென வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் அலரிமாளிகையில் கடந்த 09 ஆம் திகதி கூட்டமொன்று நடைபெற்றது.

மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், அவர்களின் சகாக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்த, மொட்டு கட்சி உறுப்பினர்கள், கொள்ளுப்பிட்டிய (மைனாகோகம) மற்றும் காலி முகத்திடல் (கோத்தாகோகம) போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர் நாடளாவிய ரீதியில் வன்முறை வெடித்தது.

இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களிடம் சிஐடியினர் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர். பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவிடம் 5 மணிநேரம், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தான் வன்முறையை ஆதரிப்பதில்லை எனவும், இவ்வாறு நடப்பது தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...