mahinda namal
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவிடம் 5 மணி நேரம் விசாரணை!

Share

மே – 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 5 மணிநேரம் இரகசியமாக வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த இடத்துக்கு நேற்று முன்தினம் (25) நேரில் சென்றே குற்றப் புலனாய்வு பிரிவினர், இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாதென வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் அலரிமாளிகையில் கடந்த 09 ஆம் திகதி கூட்டமொன்று நடைபெற்றது.

மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், அவர்களின் சகாக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்த, மொட்டு கட்சி உறுப்பினர்கள், கொள்ளுப்பிட்டிய (மைனாகோகம) மற்றும் காலி முகத்திடல் (கோத்தாகோகம) போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர் நாடளாவிய ரீதியில் வன்முறை வெடித்தது.

இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களிடம் சிஐடியினர் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர். பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவிடம் 5 மணிநேரம், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தான் வன்முறையை ஆதரிப்பதில்லை எனவும், இவ்வாறு நடப்பது தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...