10 12
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் இடமாற்றம்

Share

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 22 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் இவர்களுக்கு குறித்த பதவியை வகிக்க தகுதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதவி நீக்கப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் தன்னார்வ அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதவிகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரகாகொட, மின்னேரிய, சிவாலகுளம், ஓபாத, வஹல்கட, அங்குலான, மஹவ, உடப்பு, அயகம, குச்சவெளி, மடாடுகம, கொஸ்வத்த, ஹசலக, ஹுரிகஸ்வெவ, ஒயாமடுவ, நாகொல்லாகம, நொட்டகரச்சால், மதவச்சி, திவுல்வெவ, பதியதலாவ, நெல்லியடி மற்றும் நோர்வூட் ஆகிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இவ்வாறு பதவி இழந்துள்ளனர்.

மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...

world 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பனமுராவில் பயங்கரம்: 46 வயது நபர் அடித்துக் கொலை, இருவர் கைது!

இரத்தினபுரி மாவட்டம், பனமுரா பகுதியில் 46 வயதுடைய நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை...

world 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: மீண்டும் பணிக்குத் திரும்பினர்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்திருந்த நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் இன்று (ஏப்ரல்...