இந்தியா- தமிழகம் மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு பொருட்கள் இருப்பதாக, கியூப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து தேடுதலில் ஈடுபட்ட போது, குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது வேதாளை தெற்கு தெருவில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 34 மூடைகளில் 1700 கிலோ மஞ்சள், 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சதாம் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment