india
இலங்கைஇந்தியாசெய்திகள்பிராந்தியம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 40 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!

Share

இந்தியா- தமிழகம் மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு பொருட்கள் இருப்பதாக, கியூப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து தேடுதலில் ஈடுபட்ட போது, குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

india 1

இதன்போது வேதாளை தெற்கு தெருவில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 34 மூடைகளில் 1700 கிலோ மஞ்சள், 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சதாம் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...