20 24
இலங்கைசெய்திகள்

கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியா ஒதுக்கியுள்ள 2000 மில்லியன் ரூபாய்கள்

Share

கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியா ஒதுக்கியுள்ள 2000 மில்லியன் ரூபாய்கள்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தம் 2,371 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக அதிகாரமளித்தல் போன்ற முக்கிய துறைகளில் ஒதுக்கீடுகள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுகளில் கல்விக்கு 315 மில்லியன், சுகாதாரத்திற்கு 780 மில்லியன், விவசாயத்திற்கு 620 மில்லியன் மற்றும் மீன்வளத்திற்கு 230 மில்லியன் ரூபாய்களும் உள்ளடங்குகின்றன.

அதன்படி, இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...