images 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

25 மலைப்புலிகள் பொறிகளில் சிக்கி உயிரிழப்பு!

Share

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25 மலைப்புலிகள் பொறிகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், விலங்குகளை மீட்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொறிகளில் சிக்கிய பெரும்பாலான புலிகள் சுமார் 15 மணித்தியாலங்களுக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார். பொறிகளில் நீண்ட நேரம் சிக்கி கிடப்பதால் அதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களாலும் உடல் உறுப்புகளில் ஏற்படும் காயங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

போதிய எண்ணிக்கையிலான வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் இல்லாததும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் அலுவலகங்கள் சில பகுதிகளில் இல்லாமையும் எரிபொருள் தட்டுப்பாடு, மயக்க மருந்து பணியாளர்கள் வருவதில் தாமதம். மேலும், கள வனவிலங்கு அலுவலர்கள் இல்லாததாலும் புலிகள் பொறிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...