1 32
இலங்கைசெய்திகள்

இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம்

Share

இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம

இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை-இந்திய கப்பல் சேவையானது ஜனவரி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கை இடையே மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்த கப்பல் சேவை, கடந்த காலத்தில் நிலவிய யுத்தம் காரணமாக சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 2023ம் ஆண்டு பல்வேறு தரப்பினரின் பலத்த முயற்சி காரணமாகக் குறித்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமானது. எனினும் வட-கிழக்கு பருவமழை காரணமாக சமீப நாட்களாக குறித்த கப்பல் சேவை இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி தொடக்கம் இலங்கை-இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவுகள் டிசம்பர் 25ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...

சூறாவளி
இலங்கை

டைபூன் சூறாவளியின் தீவிரம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல்...

Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...