24 668c38019c475
இலங்கைசெய்திகள்

கொழும்பு செல்ல முன்னர் வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு அளித்த வாக்குறுதி

Share

கொழும்பு செல்ல முன்னர் வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு அளித்த வாக்குறுதி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை பேச்சுவார்த்தைக்காக கொழும்பிற்கு அழைத்திருந்த நிலையில் இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு சென்று மீண்டும் வருவேன் என மக்களிடம் உறுதியளித்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னை வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறே கூறியுள்ளார்.

ஆனால் இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பேசி முடிவெடுக்கப்படவுள்ள நிலையிலும், என்னோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தும் முகமாகவுமே என்னை கொழும்பிற்கு அழைத்துள்ளனர்.

நான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவே கொழும்பு சென்று வரவுள்ளேன். ஆனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தானே வைத்திய அத்தியட்சகர் எனத் தெரிவிக்கின்றார். அந்த முடிவை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும்.

தற்போதும் சட்டப்படி நானே பதில் வைத்திய அத்தியட்சகர்.எனவே மக்கள் பதற்றமடையவோ, குழப்பமடையவோ தேவையில்லை. மக்கள் என் மீது வைத்த அன்புக்கு நன்றி.மீண்டும் வருவேன் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் உறுதிமொழியை ஏற்ற பொதுமக்கள் வைத்தியரை வழியனுப்பியதுடன் போராட்டத்தை நிறைவுக்கும் கொண்டு வந்திருந்தனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பூதாகரமாக வெடித்திருந்ததோடு, ஒருபுறம் மக்கள் போராட்டம் இடம்பெற -மறுபுறம் பதில் வைத்திய அத்தியட்சகரை வெளியேற்றுவதற்கான காய் நகர்தல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...