Connect with us

இலங்கை

மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று தீர்ப்பு

Published

on

24 663011c2a6600

மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று தீர்ப்பு

ரதுபஸ்வெல கிராமத்தில் மூன்று பேர் உயிரிழந்து, ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடையக் காரணமாக இருந்த ராணுவ துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(30) வழங்கப்படவுள்ளது.

கம்பஹா, வெலிவேரிய அருகே அமைந்துள்ள ரதுபஸ்வெல கிராமத்தில் பிரபல வர்த்தகரும், பொதுஜன பெரமுனவின் தற்போதைய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக பெரேராவிற்குச் சொந்தமான ஹேலிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த தொழிற்சாலையின் இரசாயனக் கழிவுகள் காரணமாக ரதுபஸ்வெல கிராமத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக தங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி செய்து தரக் கோரி ரதுபஸ்வெல கிராம மக்கள், கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அன்றைய போக்குவரத்து அமைச்சின் செயலாளராக இருந்த தம்மிக பெரேரா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அன்றைய செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ச ஆகியோருக்கு இடையில் நிலவிய நெருங்கிய நட்பு காரணமாக ரதுபஸ்வெல ஆர்ப்பாட்டத்தை அடக்கி, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க ராணுவ படைப்பிரிவு ஒன்று அனுப்பப்பட்டது.

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன தலைமையிலான குறித்த ராணுவப் படையணி, கோட்டாபயவின் உத்தரவின் பிரகாரம் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக , சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.

இதன் காரணமாக பாடசாலை மாணவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்து, ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமுற்றிருந்தனர்.

ராஜபக்‌ச அரசாங்கம் தோல்வியுற்று, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன உள்ளிட்ட நான்கு ராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டனர்.

தம்மிக பெரேராவின் ஹேலீஸ் நிறுவன தொழிற்சாலையும் அங்கிருந்து அகற்றிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த ரதுபஸ்வெல சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(30) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்3 seconds ago

​இன்றைய ராசி பலன் 21.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 21, 2024, குரோதி வருடம் வைகாசி 8, செவ்வாய்க் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்24 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 20.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...