24 6607c92b9a804
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

Share

அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் கட்சியின் தலைமையகத்திலோ அல்லது வேறு எந்த பொது இடத்திலோ நடைபெறாமல் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு இடம்பெற்றமைக்கான காரணம் குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக தென்னிலங்கை அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர், நாமல் ராஜபக்சவுடன் மோதல் உச்சகட்டத்தை எட்டியதால், மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

எனினும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட குழுவினர் கடுமையாக வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

எனினும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பசில் ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளார். கட்சியின் ஒழுக்காற்று குழு மற்றும் மோதலைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அவரது அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரையும் வெற்றி கொள்வதற்காக பத்து பல சேனா என்ற பிரச்சார திட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...