tamilni 352 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையில் ஒப்பந்தம்

Share

இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையில் ஒப்பந்தம்

இலங்கை மத்திய வங்கியில், இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவும், இலங்கையின் மதுவரித் திணைக்களமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களைக் தடுக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தம், நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்ட விதிகளின் கீழ், விசாரணைகள் மற்றும் வழக்குகளுக்காக, இரண்டு நிறுவனங்களுக்கிடையில் தகவல் பகிர்வை பலப்படுத்துகிறது.

முன்னதாக, 2008ஆம் ஆண்டு முதல் இலங்கை நிதிப்புலனாய்வுப் பிரிவு, சர்வதேச நாடுகளுடன் 44 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும், இலங்கையின் சுங்கம், குடிவரவு, உள்நாட்டு வருமானம் மற்றும் பொலிஸ் உட்பட உள்நாட்டு நிறுவனங்களுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது.

இந்தநிலையில் நிதிப்புலனாய்வு பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையிலான இந்த கூட்டு முயற்சி, இலங்கையின் நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் நிதிக் குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...