tamilnih 98 scaled
இலங்கைசெய்திகள்

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி

Share

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ் ஜனதா சபாவை உருவாக்கிய போது சன்ன ஜயசுமணவும் அதில் உள்ளடங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் சன்ன ஜயசுமண உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நிதஹஸ் ஜனதா சபாவை விட்டும் விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டது.

எனினும் அங்கு சிறுபான்மைக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சன்ன ஜயசுமணவை ஒதுக்கி நடக்கத் தலைப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சன்ன ஜயசுமண தற்போது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலும் அரசாங்கத்திலும் இணைந்து கொள்வதற்கு தூதுவிடத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....