tamilni 15 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தீவிரமாக பரவும் டெங்கு

Share

கொழும்பில் தீவிரமாக பரவும் டெங்கு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 72 அரச நிறுவனங்கள் மற்றும் 53 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் இனங்காணப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களத்தினால் 121 அரச நிறுவனங்கள் மற்றும் 65 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

மழையுடனான காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 47 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொதட்டுவ, மஹரகம போன்ற பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...