rtjy 145 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

Share

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட, இணையப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அங்கீகரிக்கும் அதிகாரம், விரிவான திருத்தங்களின் கீழ் ஜனாதிபதிக்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளது.

திருத்தங்களின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை ஆணைக்குழு கொண்டிருக்கும்.

அதன்படி, ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் ஐந்து பேரின் பெயர்களை ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைப்பார்.

இதற்கமைய ஆணையத்தின் உறுப்பினராக ஒருவரின் பெயரை, நாடாளுமன்றம் அங்கீகரிக்க மறுத்தால், அரச தலைவர் புதிய நியமனத்தை வழங்குவார்.

ஆணைக்குழுவின் உறுப்பினரை நீக்கும் விடயத்தில் கூட, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு மட்டுமே ஜனாதிபதி அதைச் செய்ய முடியும்.

இந்த மாற்றங்கள், யோசனையின், அசல் வரைவில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும் இந்தநிலையில்,மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்பவர்களுக்கான தண்டனை அதிகம், வேறு எந்தவொருவரின் மத உணர்களை காயப்படுத்துவது, இரகசியத்தன்மையை பாதுகாப்பது, இலங்கைக்கு வெளியே குற்றங்களை செய்வோருக்கான ஏற்பாடுகள் போன்ற விடயத்திலேயே மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இதனை ஏற்று சமர்ப்பிக்கப்பட்ட யோசனை திருத்தங்களை ஆய்வு செய்த நீதியரசர், குறித்த சில சரத்துக்களை தவிர, யோசனையின் மற்ற விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இல்லை என்பதை அவதானித்துள்ளனர்.

ஆகவே, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் யோசனையை நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...