rtjy 145 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

Share

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட, இணையப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அங்கீகரிக்கும் அதிகாரம், விரிவான திருத்தங்களின் கீழ் ஜனாதிபதிக்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளது.

திருத்தங்களின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை ஆணைக்குழு கொண்டிருக்கும்.

அதன்படி, ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் ஐந்து பேரின் பெயர்களை ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைப்பார்.

இதற்கமைய ஆணையத்தின் உறுப்பினராக ஒருவரின் பெயரை, நாடாளுமன்றம் அங்கீகரிக்க மறுத்தால், அரச தலைவர் புதிய நியமனத்தை வழங்குவார்.

ஆணைக்குழுவின் உறுப்பினரை நீக்கும் விடயத்தில் கூட, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு மட்டுமே ஜனாதிபதி அதைச் செய்ய முடியும்.

இந்த மாற்றங்கள், யோசனையின், அசல் வரைவில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும் இந்தநிலையில்,மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்பவர்களுக்கான தண்டனை அதிகம், வேறு எந்தவொருவரின் மத உணர்களை காயப்படுத்துவது, இரகசியத்தன்மையை பாதுகாப்பது, இலங்கைக்கு வெளியே குற்றங்களை செய்வோருக்கான ஏற்பாடுகள் போன்ற விடயத்திலேயே மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இதனை ஏற்று சமர்ப்பிக்கப்பட்ட யோசனை திருத்தங்களை ஆய்வு செய்த நீதியரசர், குறித்த சில சரத்துக்களை தவிர, யோசனையின் மற்ற விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இல்லை என்பதை அவதானித்துள்ளனர்.

ஆகவே, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் யோசனையை நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கு நற்செய்தி: குறைந்தபட்ச ஊதியம் ரூ. 30,000 ஆக உயர்வு!

இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் துறை ஆணையாளர்...

image 9f98662118
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்கவில் ஒரு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு: மலேசியாவிலிருந்து வந்த வர்த்தகர் கைது!

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய “குஷ்” (Kush) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் 1.8 மில்லியன் ஊழியர்களுக்கு AI அச்சுறுத்தல்: கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் பணிபுரியும் மக்களில் கணிசமானோர், குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ளவர்கள், செயற்கை நுண்ணறிவின்...

1673514804 Independanr Sri Lanka 6
செய்திகள்அரசியல்இலங்கை

78-வது சுதந்திர தின விழா: கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது!

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின விழாவை இம்முறை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் (Independence Square)...