tamilni 4 scaled
இலங்கைசெய்திகள்

மகனுடன் வைத்தியசாலைக்கு சென்ற தாய் யானை தாக்கி பலி

Share

மகனுடன் வைத்தியசாலைக்கு சென்ற தாய் யானை தாக்கி பலி

தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா (50 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த போது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மகனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...