rtjy 33 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் சிவப்பு பிடியாணைகளை மறுக்கும் சர்வதேச பொலிஸார்

Share

இலங்கையின் சிவப்பு பிடியாணைகளை மறுக்கும் சர்வதேச பொலிஸார்

சர்வதேச பொலிஸார் தற்போது குற்றவாளிகளுக்கு சிவப்பு பிடியாணைகளை வழங்க மறுத்து வருவதாக குற்றவியல் மற்றும் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கையில் வழங்கப்படும் தண்டனை மரண தண்டனை என்பதே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன் அழைக்கப்பட்ட போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த குற்றம் மற்றும் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட,

“பாதாள உலகத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பட்டியலை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் புகைப்படங்கள், வசிக்கும் இடங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

தற்போது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இருந்து 148 சிவப்பு பிடியாணைகளை பெற்றுள்ளோம். அவர்களில் சிலரை இலங்கைக்கு அழைத்து வர வாய்ப்பு கிடைத்தது.12 பேர் இந்தியாவில் சிறையில் உள்ளனர்.

பாதாளக்குழுக்கள் முழுமையாக வெளிநாட்டில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பணத்திற்காக கொலை செய்யும் குழுவையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

அவர்களுக்கு உதவுவோர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . கடந்த காலங்களில் மோதல்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான பல வழக்குகள் உள்ளன. இது தொடர்பான கோப்புகள் அனைத்தும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிலரின் செயற்பட்டால் அதிகாரிகள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அவ்வாறான கொலைகளை நியாயப்படுத்த வேண்டும் என முயற்சிக்கின்றனர்.

ஒருவரைக் கைது செய்யப் போகும் போது, அவர் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு செல்வது இப்போது எங்களுக்குப் பிரச்சினையாகி விட்டது.

சமீபத்தில், ஹந்தயா என்ற நபர் குற்றம் நடந்த 02 நாட்களுக்குள் துபாய்க்கு சென்றுள்ளார்.

இவ்வாறான குற்றவாளிகள் தொடர்பில் நாங்கள் சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை கேட்டால், அவர்கள் அதனை மறுக்கின்றனர்.

ஒரு சந்தேக நபரை உங்கள் நாட்டிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாங்கள் ஒருபோதும் கொண்டு வந்து ஒப்படைக்க மாட்டோம் என அழுத்தமாக தெரிவிக்கின்றனர்.

அதேபோல், நாங்கள் கோரிய 05 சிவப்பு அறிவிப்புகளை அவர்கள் நிராகரித்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...