rtjy 32 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஆபத்தான நபர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஆபத்தான நபர்

கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லயில் வட்டிக்கு பணம் கொடுத்த நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதான சந்தேகநபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கடன் கொடுத்த ஜானக புஸ்பகுமார வட்டிப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கரவண்டியில் சென்று விட்டு கொரவ பிரதேசத்தில் உள்ள தாய் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் டுபாயில் பதுங்கியிருக்கும் ஒரு குற்றவாளியான பன்ட்டியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலுக்கமைய, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு காரணமாக பன்ட்டியுடன் இருந்து விலகிய கட்டா என்பவர் பன்ட்டிக்கு அதிர்ச்சி கொடுப்பதற்கு இந்த கொலையை செய்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கொலைக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையின் போது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த எந்தத் தகவலும் அவருக்குத் தெரியவில்லை எனவும், அவர் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் சந்தேக நபர் கூறியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் இரண்டு இரட்டை சகோதரர்களில் ஒருவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...