சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

திருமண புகைப்படம் வெளியிட தயாரா? சீமான் கேள்வி

Share

திருமண புகைப்படம் வெளியிட தயாரா? சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், திருமண புகைப்படம் வெளியிட தயாரா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்
சமீபத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது அவர், “சீமான் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். அவர், என்னை பயன்படுத்திக் கொண்டார் கடைசியில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.

மேலும், “சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார்” எனவும் கூறினார்.

இந்த புகாரில், நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் பொலிசார் விசாரணை செய்தனர்.

திருமண புகைப்படம் வெளியிடுங்கள்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நடிகை விஜயலட்சுமி என்னுடன் ஒரு படம் நடித்தார். ஆனால், வீர லட்சுமிக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது.

நான் காதலித்தேன் என்றும், அவரை திருமணம் செய்தேன் என்றும் நடிகை விஜயலட்சுமி சொல்கிறார். அதற்கு, அவர் திருமண புகைப்படங்களை வெளியிட தயாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “இந்த விவகாரத்தில் உண்மை இல்லை. இதை போல விஜயலட்சுமி 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...