tamilni 22 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல முயற்சித்த யாழ் இளைஞர் கைது

Share

வெளிநாடு செல்ல முயற்சித்த யாழ் இளைஞர் கைது

போலியான ஆவணங்களை பயன்படுத்தி மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த இளைஞர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குடி வரவு குடி அகழ்வு பிரிவினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எயார் அரேபியா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஜி 9501 என்ற விமானத்தின் ஊடாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக ஜோர்டான் நோக்கி பயணம் செய்ய முயற்சித்தபோது காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

இந்த இளைஞர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து அது குறித்து விசாரணை செய்தபோது இவை போலி ஆவணங்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...