6 15 scaled
உலகம்செய்திகள்

எல்லாவற்றையும் மீறி முன்னேறுகிறோம் – ஜெலென்ஸ்கி

Share

எல்லாவற்றையும் மீறி முன்னேறுகிறோம் – ஜெலென்ஸ்கி

உக்ரைன் படைகள் எல்லாவற்றையும் மீறி முன்னேறி வருவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

18 மாதங்களாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர், இருதரப்பில் இருந்தும் ட்ரோன் தாக்குதலாக சென்று கொண்டிருக்கிறது.

பல நாடுகளின் உதவிகளை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பெற்று வந்தாலும், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் போராடி வருகிறது.

இதற்கிடையில் தங்கள் நாட்டின் பள்ளி மாணவர்கள் படிப்பை தொடங்கியிருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

அவர், போர் இருக்கும் சமயத்திலும் உக்ரேனிய பள்ளி மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் தொடங்கியிருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் ‘உக்ரைன் படைகள் முன்னேறி வருகின்றன. எல்லாவற்றையும் மீறி, யார் என்ன சொன்னாலும், நாங்கள் முன்னேறுகிறோம். அதுதான் மிக முக்கியமான விடயம். நாங்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...