tamilni 362 scaled
இலங்கைசெய்திகள்

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்

Share

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்

உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 5 நாடுகள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்நாட்டின் பொருளாதார ஸ்த்திரத்தன்மையை சுட்டிக்காட்டும் வண்ணம் அமையும்.

அந்தவகையில் முதலாம் இடத்தில் அமேரிக்கா,
உலக அளவில் தங்கம் கையிருப்பில் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. உலகிலேயே 8,133 மெட்ரிக் டன் தங்கம் அமெரிக்காவிடம் உள்ளது.

தங்கம் கையிருப்பில் ஐரோப்பிய நாடான ஜேர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜேர்மனியிடம் 3,355 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளது.

இருப்பினும் பல நாடுகள் பொருளாதாரத்தில் ஜேர்மனியை விட முன்னணியில் உள்ளன.

மூன்றாவதாக இத்தாலி
உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு உள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலியின் பெயர் மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தாலியில் 2,452 மெட்ரிக் டன் தங்கம் தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக பிரான்ஸ்
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், நான்காவது பாரிய தங்க இருப்பு நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது. பிரான்சில் 2437 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளது.

இறுதியாக ஐந்தாம் இடத்தில் ரஷ்யா
தங்க இருப்பு அடிப்படையில், ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 2,330 மெட்ரிக் டன் தங்க இருப்பு உள்ளது.

இவ்வாறு மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளில் உலக பிரசித்திபெற்ற நாடான பிரித்தானியா உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தர வரிசையில் சீனா ஆறாம் இடத்திலும் சுவிஸர்லாந்து, இந்தியா, ஜப்பான் போன்றவை அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...