வெளிநாடுகளிலிருந்து வைத்தியர்களை வரவழைப்பது சாத்தியமில்லை
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளிலிருந்து வைத்தியர்களை வரவழைப்பது சாத்தியமில்லை

Share

வெளிநாடுகளிலிருந்து வைத்தியர்களை வரவழைப்பது சாத்தியமில்லை

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான மருத்துவ நிபுணர்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து விசேட வைத்தியர்களை வரவழைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.

இது சாத்தியமான தீர்வாகாது என்பதனால் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை என சுகாதாரத்துறையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மருத்துவ நிபுணர்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட பல முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

முதலாவதாக, நிபுணர்களுக்கான ஓய்வூதிய வயது 60 இலிருந்து 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓய்வு பெற்ற நிபுணர்கள் இப்போது மாற்று நிபுணரை நியமிக்கும் வரை வைத்தியசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தநிலையில் வைத்தியர்கள், நிபுணர்களாக வருவதற்கு, அவர்களுக்கான அதிக பயிற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

எனினும் இந்த செயல்முறை குறைந்தது ஐந்து வருடங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதுவரை வைத்திய நிபுணர்களின் வெற்றிடப்பிரச்சினை நீடிக்கும் என்று வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தாதியர் சேவையில் 30,000இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மெதவத்த தெரிவித்துள்ளார்.

தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று வருடங்களாக உயர் மட்ட தாதியர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக மூன்று வருடங்களுக்குள் வைத்தியசாலையின் செயற்பாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பினை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69329d0e7c401
இலங்கைசெய்திகள்

பலத்த மின்னல் எச்சரிக்கை: மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அபாயம்! பொதுமக்கள் பாதுகாப்பாய் இருக்க அறிவுறுத்தல்

பலத்த மின்னலுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre –...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...