சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி!
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி!

Share

சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி!

இலங்கை சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி பிரச்சினைக்குப் பதிலளிக்கும் வகையில், அரசாங்கம் வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைச்சாலைகளின் அதிகபட்ச கொள்ளளவு 13,000 கைதிகளாக இருக்கும் போது, தற்போதைய தொகை 29,000 ஆக இருப்பதாக அமைச்சர் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனவே சிறைச்சாலைகள் மீதான அழுத்தத்தைத் தணிக்க வீட்டுக் காவலில் வைக்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது எ‌ன்று‌ அவ‌ர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முழுமையான மீளாய்வு செயல்முறையின் மூலம் விசேட மன்னிப்பு வழங்குவதற்கான, பரிந்துரை குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இந்த அணுகுமுறை நியாயம் மற்றும் நீதியை உறுதி செய்யும் அதே வேளையில் நெரிசல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...