வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்

Share

வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்

பல தாக்குதல்களுக்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய யாழ்ப்பாண மருத்துவர் குறித்த தகவல்களை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு பொருளாதார நெருக்கடியே காரணம் என்றாலும், பொலிஸார் இந்த விடயத்தை குறைத்து மதிப்பிடுகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வைத்தியரின் குடும்பம் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சாவியை ஒப்படைத்த பின்னர் இந்த வாரம் வாடகை வீட்டை காலி செய்யும் நிலைக்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை எட்டியுள்ளது.

இந்த வீடு மருத்துவ நிபுணரின் குடும்பத்திற்கு நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஆயுதமேந்திய சிலரால், சொத்துக்களும் வாகனங்களும் பலமுறை சேதப்படுத்தப்பட்டன.

வீட்டின் உரிமையாளருக்கும் மற்றுமொருவருக்கும் இடையிலான குரோதமே இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அத்துடன் வீட்டு உரிமையாளர் மரணமான நிலையில் அதற்கான உரிமைக் கோரலும் தீவிரமான நிலையிலேயே தாக்குதல்களும் அதிகரிக்கப்பட்டன.

எனினும் பல முறை முறைப்பாடு அளித்தும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் உரிமையாளரின் குடும்பம் பிரதேச செயலாளரிடம் சாவியை ஒப்படைக்க முடிவு செய்தது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்ததால், அவர்கள் அதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...