tamilni 405 scaled
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

Share

கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன், காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி .

குறித்த சம்பவம் 26 ஆம் திகதி மதியம் 1:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. தாயார் நாளாந்த கூலி வேலைக்காக சென்ற பொழுது வீட்டில் தந்தையுடன் இருந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

தந்தையார் நித்திரையில் இருந்த பொழுது காணிக்குள் அமைந்திருந்த பாதுகாப்பற்ற (மண்) கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான் .

திடீரென கண் விழித்த தந்தை சிறுவனைக் காணாது தேடியுள்ளார். பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கிணற்றுக்குள் சேற்றில் புதைந்த நிலையில் சிறுவனை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சந்திரகுமார் பாதுசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதபரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...

face book
இலங்கை

முகநூலால் சீரழிந்த வாழ்க்கை!

இந்த வருடம், கதிர்காமம் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில்...

suicide
இலங்கை

தன்னைத்தானே சுட்டு கொண்ட காவல் அதிகாரி!

பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால்...

jail sentence
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை...