vehicle
இலங்கைசெய்திகள்

கட்டுப்பாடு தொடரும்!!

Share

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தொடரும் என்றும் அவற்றை இறக்குமதி செய்ய அனுமதித்தால் அந்நியச் செலாவணி கையிருப்புகளில் இருந்து பெருமளவான அமெரிக்க டொலர்கள் வெளியேறும் என்றும் திறைசேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாகன இறக்குமதிக்கான கட்டுபாடுகள் ஒரு வருடத்துக்குள் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அடுத்த நான்கு மாதங்களுக்குள் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நாணய மாற்று விகிதங்கள், அந்நிய செலாவணி கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் நீங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கணினிகள், அலைபேசிகள் , தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு சாதனங்கள், உதிரிப் பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் கட்டுப்பாடுகளின் நீக்கம்  குறித்து அமைச்சு தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...