douglas devananda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் படகுகள் கண்காணிப்பு செயல்முறை

Share

நாட்டில் பயன்பாட்டில் உள்ள அனைத்து பல நாள் மீன்பிடி படகுகளுக்கும் ”படகுகள் கண்காணிப்பு செயல்முறை” (VMS – Vessel Monitoring System)  வி. எம். எஸ் செய்மதி தொழில்நுட்ப கருவிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த வருட இறுதிக்குள் 4,200 படகுகளுக்கு வி. எம். எஸ் கருவி பொருத்தும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடை க்கான  வினா நேரத்தில்  அரச  தரப்பு  எம்.பி திருமதி கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்வி க்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள பல நாள் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் அவற்றில் செய்மதி தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள படகுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்  கோகிலா குணவர்தன எம்.பி   கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நாட்டில் தற்போது 5,000 பல நாள் மீன்பிடிப் படகுகள் பாவனையில் உள்ளன. அவற்றில் 3,700 படகுகளுக்கு தொழில்நுட்ப வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்திட்டத்தின் மூலம் 4,200படகுகளுக்கு வி. எம். எஸ் கருவிகள் பொருத்தப்படவுள்ளதுடன் அதில் 3,075 படகுகளுக்கு அதனைப் பொருத்தும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் படகுகளை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு மையம் ஒன்றை அமைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...