murugan
இந்தியாஇலங்கைசெய்திகள்

உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

Share

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.

அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார்.

சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார்.

முருகனின் உடல்நிலை மோசமானதால் அவருக்கு ஜெயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது‌. தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சிறை காவலர் ஒருவரை அவதூராக பேசிய வழக்கு சம்பந்தமாக முருகன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சிறை அதிகாரிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து 52 நாட்களுக்கு பிறகு முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இன்று காலை அவர் ஜெயில் உணவை சாப்பிட்டார்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
buzz
உலகம்செய்திகள்

நாங்கள் ஆறு முறை நிலவுக்குச் சென்றுள்ளோம்: 1969 நிலவுப் பயணம் உண்மையே என நாசா விளக்கம்!

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும்...

25 690489b584776
செய்திகள்இலங்கை

தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது விலையுயர்ந்த நாடு

Numbeo வலைத்தளத்தின் தரவுகளின்படி, இலங்கை, தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் (SAARC) இரண்டாவது மிகச் செலவுமிக்க...

25 68eee1ad403f8
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலையில் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்கள அதிகாரி மீது பௌத்த துறவியே குற்றச்சாட்டு – சாணக்கியன் கடிதத்தை வெளியிட்டார்

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் திட்டமிட்டுக் காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகராகச்...

Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...