இலங்கை சாரணர் சங்கத்தின் 110வது ஆண்டு நினைவு கூறும் வகையில் யாழ் மாவட்ட சாரணர் கிளைச்சங்கத்தின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட திரிசாரணர் குழாம், வீட்டுத்தோட்டம் செய்வதனை ஊக்குவித்தது.
இதன்படி இன்று(13) வியாழக்கிழமை அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தில் J/91 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கான வீட்டுத்தோட்டம் செய்வதனை ஊக்குவிக்கும் முகமாக ‘ஒவ்வொரு செடியும் பசி தீர்க்கும்’ எனும் தொனிப்பொருளின் மூலம் 110 குடும்பங்களுக்கான பயிர் விதைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட சாரணர் ஆனையாளர் இ.தவகோபால், கிராம உத்தியோகத்தர் வளர்மதி கெளரீபாலன், பொருளாதார உத்தியோகத்தர் சுபாஜினி தனதீபன் மற்றும் திரிசாரணர்களும் கலந்து கொண்டனர்.
#SriLankaNews
Leave a comment