image 6483441 1 e1660383507532
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் – தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தான மஹோற்சவம்

Share

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பன்னிரண்டு நாள்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 08 ஆம் திகதி, வியாழக் கிழமை ஆவணித் திருவோண தினத்தன்று காலை 8.30 மணிக்கு “துர்க்கா புஷ்கரணி” தீர்த்தத் தடாகத்தில் இடம் பெறவுள்ள தீர்த்தோற்சவம் மற்றும் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ள கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

தினமும் முற்பகல் 9.30 மணிக்கும், பிற்பகல் 5.30 மணிக்கும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் திருவீதி உலா இடம்பெறும்.

மஹோற்சவ காலத்தில் அம்பிகை அடியவர்கள் ஆசார சீலர்களாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வருகைதந்து வழிபாடியற்றி அம்பிகையின் அஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு தேவஸ்தான நிர்வாக சபை கேட்டுக் கொண்டுள்ளது.

image 6483441

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....