image f88170240c
இந்தியாஇலங்கைசெய்திகள்

அத்துமீறிய மீன்பிடி! – தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

Share

அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது இழுவைப்படகையும் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறும் நடவடிக்கையில்
ஈடுபட்டு வருவதாக தொடர்ச்சியாக மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையிலேயே, தமிழகத்தின் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இவர்களை கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...