1660204755 Australian cricketers 1 1
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியால் இலங்கைக்கு பெருமளவு டொலர் உதவி

Share

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது வென்ற பரிசுத் தொகையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர்களான பெட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோரின் தலைமையில் 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் UNICEF ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் நன்கொடையாக வழங்கும் நிதியானது, தேவையிலுள்ள 1.7 மில்லியன் இலங்கைக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் மனநலச் சேவைகளை ஆதரிப்பதற்கான UNICEF இன் திட்டங்களுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...