vijaya
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு

Share

” எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் கையாளப்படும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசுக்காக ஜனாதிபதியிடம் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அதில் பிரதானமான ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் நீதி அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

” போரால் பகைமை ஏற்பட்டிருந்தது. அந்த பகைமையை கருணைமூலம் வெல்லவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை நல்லாட்சியின்போது மேற்கொள்ளப்பட்டது. சாட்சியங்கள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். சிலருக்கு பிணை வழங்கப்பட்டது.

விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. சிலருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படும். எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். ” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....