296116705 915919316027570 1265306502410148331 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தென்மராட்சி கமக்கார அமைப்புகளுக்கு நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அறிவிப்பு

Share

சாவகச்சேரி ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் சுழற்சியான முறையில் எவ்வித குழப்பமும் இன்றி எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குள் உள்ள கமக்கார அமைப்புக்களுக்கும் பெரும் போக நெற் பயிர்ச்செய்கைக்காக டீசல் விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்பொழுது மழை பெய்திருப்பதால் பெரும்போக நெற்செய்கைக்காக எரிபொருள் இல்லாது விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் அவர்களின் எரிபொருள் தட்டுப்பாட்டினை எம்மால் முடிந்தவரை நிவர்த்தி செய்வதற்கு முன்வந்துள்ளோம்.

அந்தவகையில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் இருக்கும் கமக்கார அமைப்புக்கள் தம்முடன் தொடர்பினை ஏற்படுத்தி உங்கள் கமக்கார அமைப்புக்களின் ஊடாக பெரும் போக நெற்பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் என தெரிவித்தார்.

அத்துடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரும் விவசாயிகள் தாங்கள் வசிக்கும் கிராம சேவர் பிரிவினை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை மற்றும் QR Code கட்டாயம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு
தாெ.இல-: 0776668739
வைத்திலிங்கம் சிவராசா
நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...