1659316844 navy 2
இந்தியாஇலங்கைசெய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி தமிழகம் அனுப்பிய கடற்படையினர்!

Share

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி தமிழகம் அனுப்பிய கடற்படையினர்!

நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகின் பழுதை சரி செய்த பின் படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து அவர்களை ராமேஸ்வரம் திருப்பி அனுப்பினர்.

கடந்த சனிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் 6 பேர் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் திடீரென படகில் உள்ள இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகில் கடல் நீர் புக ஆரம்பித்தயைடுத்து படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கியது.

அதை கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் உடனடியாக மீனவர்களை பத்திரமாக மீட்டு படகில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு சரி செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால் கடற்படை வீரர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் உடனடியாக மன்னார் கடற்படை முகாமில் இருந்து மெக்கானிக்கை வரவழைத்து படகை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். ஆனால் தொடர்ந்து இலங்கை கடற்படை எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

உடனடியாக இலங்கை கடற்படை வீரர் ஒருவர் ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு உரிமையாளர் செல்போன் எண்ணை வாங்கி வாட்ஸ்அப் மூலமாக ´நான் இலங்கை கடற்படை வீரர் பேசுகிறேன், உங்களுடைய படகு பழுதாகி மன்னார் கடற்படை முகாம் அருகே உள்ளது. உடனடியாக வந்து படகை மீட்டுச் செல்லுங்கள்´ என தகவல் அனுப்பியுள்ளார்.

உடனடியாக படகின் உரிமையாளர் மீனவர்களையும் படகையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகு ஒன்றை அனுப்பினார்.

இந்நிலையில் பழுதான படகை இலங்கை கடற்படை வீரர்கள் சர்வதேச கடல் எல்லை வரை இழுத்து வந்து படகின் உரிமையாளர் அனுப்பி வைத்த படகில் மீனவர்களையும் படகையும் பத்திரமாக ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்பரப்பில் படகு பழுதாகி நின்ற தமிழக மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக திருப்பி அனுப்பிய நிகழ்வு ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் சுற்றி வளைத்தது, தங்களை படகுடன் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைக்க போகிறார்கள் என அச்சமடைந்திருந்த சூழலில் உணவளித்து பத்திரமாக திருப்பி அனுப்பியதற்கு இலங்கை கடற்படைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கரை திரும்பிய மீனவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...