அரசியல்
நாடு படுகுழிக்குள் விழும் அபாயம்! – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் எச்சரிக்கை
” நாட்டில் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாடு படுகுழிக்குள் விழும் அபாயம் உள்ளது.”
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி.
” நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதாவது நோயாளி ஒருவர் ஐசியூவில் சிகிச்சை பெறுவது போன்றதாகும். எனவே, வலியுடன்கூடிய சிகிச்சை செய்வதாவது, காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் குணப்படுத்த முடியும். அவ்வாறான கடும் தீர்மானங்களை ஜனாதிபதி எடுப்பார் என நம்புகின்றோம்.
அதேபோல சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். அப்போது நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை பெறலாம். கடன் கொடுப்பனவுகளை மீளமைத்துக்கொள்ளலாம்.” – எனவும் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login