gotta
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு! – கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

Share

இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன.

தொடர் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், கடந்த 9 ஆம் திகதி மிகப்பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், இரவோடு இரவாக மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

இருப்பினும் அங்கு அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை எனவும், சாதாரண மக்களுக்கு வழங்கப்படுவது போல் 15 நாட்கள் தங்குவதற்கான சாதாரண விசாவே வழங்கப்பட்டுள்ளது எனவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது கோட்டாபய இந்தியா செல்வதற்கான அனுமதியை வழங்கக் கோரி இந்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் எனவும், அந்தக் கோரிக்கையை இந்திய அரசு மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India #SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...