இலங்கை
3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்தது கப்பல்!
3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய முதல் கப்பல் நாட்டை வந்தடைந்தது.
இதேவேளை, 3,740 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் நாளை மாலை நாட்டை வந்தடையவுள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கி விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12 முதல் எரிவாயு விநியோகம் சீராகவும் முறையாகவும் நடைபெறும் என்றும், இம்மாத இறுதிக்குள் வீட்டு எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு. முதித பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login