இந்தியா
இந்திய மீனவர்கள் விடுதலை!
பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 3 ஆவடுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை அவர்கள் 12 பேரின் உடமைகளும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
படகு, தொழில் உபகரணங்கள் அரசிடமையாக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login