20220625 161819 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை எம்மிடம் தாருங்கள்! – தீர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் அனுர

Share

இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தலொன்றை நடத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சி தொடர்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே ஒருவித சந்தேகம் காணப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எமது தலைமுறை கடந்த காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டது. தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாதமே வடக்கில் பிரபாகரன் ஆயுதமேந்த காரணமானது.

எமது குழந்தைகளும் எதிர்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட வேண்டுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் பாரிய அழிவுகள் ஏற்பட்டது.

இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தலொன்றை நடாத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம்

வடக்கில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவை பெரும்பாலும் இன்று பொதுவான பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. நாம் அனைவரும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்நுழைய வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போதே நாங்கள் அனைத்து வகையான இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து செயற்ப்பட முடியும்.

வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற பேதமின்றி நாங்கள் ஒன்றிணைய வேண்டும். காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். காணாமல்போனோரின் உறவுகள் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

எனது சகோதரன் காணாமல் போயிருந்தார். காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் உண்மையை தேடும் சபை ஒன்றை உருவாக்குமாறு நாம் கடந்த காலத்தில் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் அப்போது இருந்த அரசு அதனை ஏற்கவில்லை.

மக்கள் தங்களுக்குரிய மொழியில் இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க உரிமை காணப்பட வேண்டும். இந்த நாட்டில் பாரிய திருப்புமுனை ஏற்படவேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8f144b60 f970 11ef 9e61 71ee71f26eb1.jpg
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளையில் இளம் வயதுக் கர்ப்பங்கள் அதிகரிப்பு; வெலிக்கந்தையில் அதிக சிறுவர் குற்றங்கள் – அமைச்சர் எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இளம் வயதுக் கர்ப்பங்கள் மற்றும் இணையவழி வன்முறைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும்...

Screenshot 2025 12 02 at 16.09.23.webp
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளித் தாக்கம்: 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிப்பு – விசேட பாதுகாப்புத் திட்டம் தயார்!

சமீபத்தில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியின் விளைவாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது தாய், தந்தை...

vikatan 2025 06 24 deer3cum america iran
உலகம்செய்திகள்

அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரானிய வெளியுறவு அமைச்சர் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்க முற்பட்டால், அங்குள்ள அமெரிக்க இராணுவத்...

bee721eca96246c6bdfe477cb1fb978e
செய்திகள்உலகம்

60 பில்லியன் டொலர் வருவாய்: நெட்ஃபிளிக்ஸை முந்தியது யூடியூப்!

உலகின் முன்னணி காணொளி தளமான யூடியூப், 2025 ஆம் நிதியாண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான...