இலங்கை
எரிபொருள் நெருக்கடி – ரஷ்யாவிடம் சரணடைகிறது இலங்கை
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன – என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” இராஜதந்திர நடவடிக்கையின் நிமித்தம் இரு அமைச்சர்கள் நாளை (27) ரஷ்யா செல்கின்றனர். இதன்போது எரிபொருள் விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும். சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். ” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டில் நாளை முதல் டோக்கன் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும், படையினர் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் காஞ்சன தெரிவித்தார்.
எனவே, வரிசைகளில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
You must be logged in to post a comment Login