University of Jaffna 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலையில் துறைக்கான இருக்கைப் பேராசிரியர்களாக மூவர் நியமனம்!

Share

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்று துறைகளுக்கு, துறைக்கான இருக்கைப் பேராசிரியர்களாக (Cadre Chair professor) மூன்று பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அங்கீகாரத்தை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் சி. சிறீசற்குணராஜா தலைமையில் இன்று (25) சனிக்கிழமை இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மருத்துவ பீடத்தின் மருத்துவத் துறை, குழந்தை மருத்துவத் துறை, மற்றும் சமுதாய, குடும்ப மருத்துவத் துறை ஆகிய துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாதிருந்த இருக்கைப் பேராசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

பகிரங்க விளம்பரத்துக்கமைவாக கிடைத்த விண்ணப்பப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மருத்துவத் துறையில் பேராசிரியரும் (Professor in Medicine), மருத்துவ நிபுணருமான பேராசிரியர் தி. குமணனை மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Medicine), குழந்தை வைத்தியத் துறையில் பேராசிரியரும் (Professor in Pediatric), குழந்தை வைத்திய நிபுணருமான பேராசிரியர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸை குழந்தை வைத்தியத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Pediatric), சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியரும் (Professor in Community Medicine), சமுதாய வைத்திய நிபுணருமான பேராசிரியர் குமரேந்திரனை சமுதாய மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Community Medicine) , அந்தந்தத் துறைகளுக்கான இருக்கைப் பேராசிரியர்களாகவும் (Cadre Chair professor) நியமிப்பதற்கு தெரிவுக் குழுவின் பரிந்துரையைப் பரிசீலனை செய்த பேரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

IMG 2405 image 6483441 2 image 6483441 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...