University of Jaffna 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலையில் துறைக்கான இருக்கைப் பேராசிரியர்களாக மூவர் நியமனம்!

Share

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்று துறைகளுக்கு, துறைக்கான இருக்கைப் பேராசிரியர்களாக (Cadre Chair professor) மூன்று பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அங்கீகாரத்தை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் சி. சிறீசற்குணராஜா தலைமையில் இன்று (25) சனிக்கிழமை இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மருத்துவ பீடத்தின் மருத்துவத் துறை, குழந்தை மருத்துவத் துறை, மற்றும் சமுதாய, குடும்ப மருத்துவத் துறை ஆகிய துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாதிருந்த இருக்கைப் பேராசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

பகிரங்க விளம்பரத்துக்கமைவாக கிடைத்த விண்ணப்பப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மருத்துவத் துறையில் பேராசிரியரும் (Professor in Medicine), மருத்துவ நிபுணருமான பேராசிரியர் தி. குமணனை மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Medicine), குழந்தை வைத்தியத் துறையில் பேராசிரியரும் (Professor in Pediatric), குழந்தை வைத்திய நிபுணருமான பேராசிரியர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸை குழந்தை வைத்தியத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Pediatric), சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியரும் (Professor in Community Medicine), சமுதாய வைத்திய நிபுணருமான பேராசிரியர் குமரேந்திரனை சமுதாய மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Community Medicine) , அந்தந்தத் துறைகளுக்கான இருக்கைப் பேராசிரியர்களாகவும் (Cadre Chair professor) நியமிப்பதற்கு தெரிவுக் குழுவின் பரிந்துரையைப் பரிசீலனை செய்த பேரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

IMG 2405 image 6483441 2 image 6483441 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...