202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புலிகள் தாக்குகின்றனர்! – அம்பாறையில் 7 பேர் கைது

Share

” விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்..” என அம்பாறை நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டுக்கொண்டு வந்து, கிராமவாசிகளை அச்சுறுத்தினர் எனக் கூறப்படும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“புலிகள் தாக்குகிறார்கள்” என கூச்சலிடும் சத்தம் கேட்க, மின் வேலியை பாதுகாக்கும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை அச்சமுற்ற கிராமவாசிகள் பொலிஸ் அவசர சேவைப்பிரிவு இலக்கமான 119 தொடர்புகொண்டு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அம்பாறை மற்றும் அரந்தலாவ பொலிஸ் விசேட படைப்பிரிவு மற்றும் இராணுவத்தினர் வந்து பொலிசாருடன் இணைந்து சோதனை நடவடிக்கையில் இறங்கினர்.

திவுலான காட்டுப் பிரதேசத்துக்குள் மறைந்திருந்த போது, சந்தேக நபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...