அரசியல்
காலி முகத்திடலில் முளைத்தது ‘கோட்டா கோ கிராமம்’ ! – கூகிளிலும் உள்ளடக்கம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு ‘கோட்டா கோ கிராமம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கூகுள் வழிகாட்டலிலும் அந்த பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலி முகத்திடல் வளாகத்தில் தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த கூடாரங்கள் அமைந்துள்ள பகுதிக்கே ‘கோட்டா கோ கிராமம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login