அரசியல்
எம்மிடமே பெரும்பான்மை! – அசைக்க முடியாது என்கிறார் திஸாநாயக்க

” அரசின் இருப்புக்கு பெரிதாக அச்சுறுத்தல் எதுவும் இல்லை.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசுக்கான ஆதரவை 40 பேர் விலக்கிக்கொண்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு ஆதரவாக 117 ஆசனங்கள் உள்ளன. அதேபோல சுயாதீனமாக செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளவர்கள் சஜித் அணிக்கு சார்பாக வாக்களிக்கமாட்டார்கள். எனவே, அரசின் இருப்புக்கு அச்சுறுத்தல் இல்லை.
தொடர்ச்சியாக 8 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்போது, எனக்கே அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.
மக்களின் கோபம் நியாயமானதே. அதற்காக மன்னிப்பு கோருகின்றோம். இந்நிலைமையில் இருந்து மீள நாம் ஒன்றுபட வேண்டும். ஜனாதிபதியை போ சொல்வது தீர்வு அல்ல. ” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login